Monday, January 9, 2012

வாழ்வதற்கு வேண்டிய தகுதி - விவேகானந்தர்

* வாழ்க்கையில் எப்போதும் தூய்மை உடையவன் கடவுளுக்கு மிக நெருங்கியவனாகிறான்.

* ஏமாற்றுவதால் எதையும் செய்து விட முடியாது. அன்பாலும், ஆர்வத்தாலும், ஆன்மிக சக்தியாலுமே பெரிய செயல்களை நிறைவேற்ற முடியும்.

* பிறருக்காக செய்யும் சிறிய முயற்சி உள்ளிருக்கும் சக்தியை எழுப்புகிறது, பிறருக்காக நன்மையை எண்ணுவதால் சிங்கத்தின் பலம் இதயத்திற்கு கிடைக்கிறது.

* தன்னை அடக்கப் பழகிக் கொண்டவன் வேறு எதற்கும் வசப்படமாட்டான். அத்தகையவனே உலகில் வாழத் தகுதியுள்ளவன்.

* உங்களை ஓர் ஏழை என்று எப்போதும் நினைக்காதீர்கள். பணம் சக்தியல்ல, நன்மையும் தெய்வ பக்தியுமே சக்தி.

* தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளும் சக்தியை உண்டு பண்ணுவதே உண்மைக் கல்வி.

* அனைத்தையும் செவிசாய்த்துக் கேளுங்கள். உங்களுக்கு எது நல்லதென்று படுகிறதோ, அதை உறுதியாய்ப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.

* உயிரும், மனமும் இணைந்து செயல்பட்டால், எந்தச் செயலையும் செய்து வெற்றி பெறலாம்.

* நல்ல நூல்களைப் படிப்பது, சொற்பொழிவுகளை நடத்துவது இவற்றைவிட அன்பால் மட்டுமே ஆன்மிகத்தில் மேம்படமுடியும்.

* தேவையற்ற சிந்தனைகளை விட்டுவிட்டு மனப்பூர்வமாக இறைவனை வழிபட்டால், அவன் இருப்பதை உணரலாம்.

* பக்தனாக விரும்புகிறவன், சொர்க்கத்தை அடைவது போன்ற ஆசைகளை துவக்கத்திலேயே விட்டுவிட வேண்டும்.

* வெறுப்பையும், கோப உணர்ச்சியையும் அடக்கும் போது, அந்த அளவிற்கு நல்ல ஆற்றலை சேமிக்கிறோம். அந்த ஆற்றல் உயர்ந்த ஆன்மிக சக்தியாக மாறுகிறது.

* ஆன்மிக அறிவால் மட்டுமே நமது துன்பங்களை என்றென்றைக்கும் ஒழிக்க முடியும். மற்ற அனைத்து அறிவும் அதை குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே நீக்கும்.

* உன்னைப்பற்றி அளவுக்கு மீறி பெருமை கொள்ளாதே. பிறர் பெறாத அந்த புகழை உனக்கு அளித்தது இறைவனின் அருளே. அதை ஒரு வழிபாடாக செய்.

No comments:

Post a Comment